×

கோவளம் கடலில் மனைவி கண்முன் கணவன் பலி

திருப்போரூர்: திருப்போரூர் அருகே கோவளம் கடலுக்குள் மனைவி கண்முன்னே குளித்து கொண்டிருந்த கணவர் திடீரென நீருக்குள் மூழ்கி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை பெரம்பூர் அருகே திருவிக நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (27). இவர், நேற்று மே தின விடுமுறையை முன்னிட்டு தனது மனைவி சசிகலா மற்றும் உறவினர்களுடன் கோவளம் கடற்கரைக்கு வந்துள்ளார். பின்னர் அங்கு நீலக்கொடி கடற்கரையை சுற்றி பார்த்துவிட்டு, கார்த்திக் உள்பட அனைவரும் கடலுக்குள் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது மனைவி கண்முன்னே, கோவளம் கடலில் எழும்பிய ராட்சத அலையில் சிக்கி கார்த்திக் நடுக்கடலுக்கு இழத்து செல்லப்பட்டு நீருக்குள் மூழ்கிவிட்டார். இதை பார்த்ததும் மனைவி சசிகலா மற்றும் உறவினர்களும் அலறி கூச்சலிட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்து மீனவர்கள் ஓடிவந்து, படகில் கடலுக்குள் சென்று, அங்கு நீருக்குள் மூழ்கி கிடந்த கார்த்திக்கை மயங்கிய நிலையில் மீட்டனர். பின்னர் அவரை திருப்போரூர் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே மூச்சுத் திணறலால் கார்த்திக் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் கேளம்பாக்கம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post கோவளம் கடலில் மனைவி கண்முன் கணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Kovalam sea ,Tiruporur ,Karthik ,Thiruvik Nagar ,Perambur, Chennai ,
× RELATED தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து...